ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் "கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான" கருத்தரங்கு நிறைவுவிழா


கோவையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2017ம் ஆண்டின் (ICCCI) கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான அகில உலக கருத்தரங்கு நிறைவுவிழா இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்காவா சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன், தலைமை வடிவமைப்பாளர் குமார் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



இந்நிகழ்ச்சியில், கணினி பொறியியல் துறைத்தலைவர் கண்ணம்மாள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் தங்கவேலு தனது உரையில் மாணவர்கள் தங்கள் கல்லூரி பருவத்திலேயே ஒரு தொழிலதிபராகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார். சிறப்பு விருந்தினர் குமார் மாதவன் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி பாடங்களை புரிந்து கற்க வேண்டும் மேலும் அவற்றை ஆராய்ச்சி நோக்கத்துடன் அனுக வேண்டும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து முரளி கிருஷ்ணன் கூறுகையில், தொலைபேசி வர்த்தகம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது. மேலும் மாணவர்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டுமெனில் தொழில்நுட்பத்தில் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் எனக் கூறினார். 



இறுதியில், இக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விருதுகளும், சன்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்பியல் துறைத்தலைவர் பிரகாஷ் நன்றியுரைக் கூறினார். 



Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...